search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    திருமங்கலம் அருகே வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

    திருமங்கலம் அருகே கழிப்பறையை சுத்தம் செய்த தொழிலாளி பரிதாப சாவு வி‌ஷவாயு தாக்கியது
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(வயது49). இவருக்கு ராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சேகர் கழிப்பறை சுத்தம் செய்யும் கூலித் தொழிலாளி.

    திருமங்கலம் ராஜா ராம் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் பன்னீர் செல்வம் வீட்டிலிருந்த கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் சேகர் ஈடுபட்டுள்ளார்.

    அப்பொழுது வி‌ஷவாயு தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். சேகரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் சேகர் இறந்ததாக தெரிவித்தார்.

    தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். சேகரின் உடல் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×