search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை டிஜிபி அலுவலகம்
    X
    சென்னை டிஜிபி அலுவலகம்

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தடுப்பில் காவல்துறையின் பங்கு மிக முக்கியமானதாக திகழ்கிறது. இதனால் அவர்களும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று சென்னை காவல்துறை துணை ஆணையர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டிஜிபி அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×