search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    ராமநாதபுரத்தில் 16 ஆயிரத்து 653 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 653 பேர் தேர்வு எழுத உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தேர்வு நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராக இருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது பொது முடக்கம் தளர்வு செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 165 மாணவர்களும் 8 ஆயிரத்து 488 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 653 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டத்தில் 757 பள்ளிகளில் தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது பாதிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மையங்களுக்கு பதிலாக அதனருகே உள்ள பள்ளிகளை தயார்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×