search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மதுரையில் மது குடித்ததை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

    மதுரையில் மது குடித்ததை கண்டித்ததால் சிறுவன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது 16 வயது மகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளான். எனவே தாய் பொன்ராக்கு சிறுவனை கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×