search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    தஞ்சையில் பூட்டிக்கிடந்த ஆஸ்பத்திரியில் ரூ.1¼ லட்சம் திருட்டு

    தஞ்சையில் பூட்டிக்கிடந்த ஆஸ்பத்திரியில் ரூ.1¼ லட்சம் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தநகரில் வசித்து வருபவர் லெனின் சந்திரசேகரன். குழந்தைகள் நல டாக்டர். இவர் சாந்திநகரில் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் பணி முடிந்தவுடன் லெனின் சந்திரசேகரன் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் ஆஸ்பத்திரியின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு மேஜையை திறந்து அதில் வைத்து இருந்த ரூ.1¼ லட்சத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

    நேற்றுகாலையில் பணிக்கு வந்த ஊழியர்கள், ஆஸ்பத்திரியின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த லெனின் சந்திரசேகரன் விரைந்து வந்தார். பின்னர் அவர், தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது ஆஸ்பத்திரியில் இருந்து சிறிதுதூரம் ஓடிவிட்டு யாரையும் கவ்வாமல் நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆஸ்பத்திரியின் கதவு, மேஜையில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×