என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முறை தவறிய காதலால் மாணவி கர்ப்பம்- கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்3 Jun 2020 12:58 PM GMT (Updated: 3 Jun 2020 12:58 PM GMT)
வில்லுக்குறி அருகே முறை தவறிய காதலால் மாணவி கர்ப்பமடைந்ததால் கல்லூரி மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரு கிறார்.
இவருக்கும், அவரது அண்ணன் முறையான கல்லூரி மாணவர் இடையே முறை தவறிய காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.
3 மாதம் கடந்தபிறகு மகள் கர்ப்பமான விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. பின்னர் கர்ப்பத்தை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கலைக்க முயன்றுள்ளனர். இதில் அந்த பெண்ணிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை ஆசாரிப் பள்ளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சு (19 ) என்பவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். கைதான கல்லூரி மாணவர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மற்றொரு சம்பவம்...
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் கலப்பறையை சேர்ந்த முதியவர் சத்தியதாஸ் (72) .இவர் கடந்த மாதம் 25 -ந் தேதி தெரு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது 8 வயது சிறுமி ஒருவரும் தண்ணீர் பிடிக்க சென்றார்.
அப்போது சத்தியதாஸ் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். பாலீசார் சத்தியதாஸ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சத்தியதாசை கைது செய்தனர்.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வரு கிறார்.
இவருக்கும், அவரது அண்ணன் முறையான கல்லூரி மாணவர் இடையே முறை தவறிய காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.
3 மாதம் கடந்தபிறகு மகள் கர்ப்பமான விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. பின்னர் கர்ப்பத்தை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கலைக்க முயன்றுள்ளனர். இதில் அந்த பெண்ணிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை ஆசாரிப் பள்ளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சு (19 ) என்பவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். கைதான கல்லூரி மாணவர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மற்றொரு சம்பவம்...
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் கலப்பறையை சேர்ந்த முதியவர் சத்தியதாஸ் (72) .இவர் கடந்த மாதம் 25 -ந் தேதி தெரு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது 8 வயது சிறுமி ஒருவரும் தண்ணீர் பிடிக்க சென்றார்.
அப்போது சத்தியதாஸ் அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். பாலீசார் சத்தியதாஸ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சத்தியதாசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X