என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனியில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய ஆட்டோ டிரைவர்
பழனி:
பழனி டவுன் பழைய தாராபுரம் சாலையில் ஒரு செல்போன் கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடை அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வு செய்யப்பட்டதால் மீண்டும் கடை திறக்கப்பட்டது. கடைக்கு ஒரு வாலிபர் செல்போன் வாங்குவதுபோல வந்தார். கடை ஊழியர்களிடம் பேசிக்கொண்டே ஷோரூம்பில் வைக்கப்பட்டிருந்த செல்போன்களை திருடி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
அதன்பிறகு கடை ஊழியர் இருப்பை சரிபார்த்தபோது செல்போன் திருடு போனது தெரிய வந்தது.
கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை வைத்து பார்த்தபோது அந்த வாலிபர் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது.
இந்த காட்சிகள் அடிப்படையில் பழனி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் செல்போன்களை திருடியவர் அமரப்பூண்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என தெரிய வந்தது. அதன்பேரில் அந்த வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் இதேபோல வேறு கடைகளில் அந்த வாலிபர் கைவரிசை காட்டி உள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்