search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    தியாகதுருகம் பகுதியில் ஊர்க்காவல் படையினர்- போலீசாருக்கு மளிகை பொருட்கள்

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் பகுதியில் ஊர்க்காவல் படையினர்- போலீசாருக்கு மளிகை பொருட்கள் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்து.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக அயராது பணியாற்றி வரும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 50 பேருக்கு நிவாரண பொருட்கள் அரிசி, காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள், முட்டை வழங்கப்பட்து.

    இதனை தனது சொந்த செலவில் அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர் வழங்கினார். நிகழ்ச்சியில் பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், நகர நிர்வாகி பாலமுரளிகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இதயக்கண்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×