என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு
Byமாலை மலர்3 Jun 2020 10:44 AM GMT (Updated: 3 Jun 2020 10:44 AM GMT)
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் வலதுகரை, இடதுகரை, கவர்னர் பாயிண்ட், 16 கண் மதகு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜ், உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதே போன்று தேவூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் கிழக்குக்கரை கால்வாய், உபவாய்க்கால் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் வலதுகரை, இடதுகரை, கவர்னர் பாயிண்ட், 16 கண் மதகு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜ், உதவி பொறியாளர் மதுசூதனன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதே போன்று தேவூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் கிழக்குக்கரை கால்வாய், உபவாய்க்கால் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X