என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்3 Jun 2020 7:59 AM GMT
தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்தவர் க.அன்பழன். அவர் மார்ச் மாதம் சென்னையில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவியாகும்.
திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் ஆகியோர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ள நிலையில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 29ம் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திமுகவின் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பொதுக்குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனின் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வில் பொதுச்செயலாளராக இருந்தவர் க.அன்பழன். அவர் மார்ச் மாதம் சென்னையில் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவியாகும்.
திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் ஆகியோர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ள நிலையில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 29ம் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திமுகவின் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பொதுக்குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனின் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X