என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்
Byமாலை மலர்3 Jun 2020 4:55 AM GMT (Updated: 3 Jun 2020 4:55 AM GMT)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் 6 நாளும் வேலை நாட்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என இருந்த பணி நாட்கள் 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என இருந்த பணி நாட்கள் 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X