search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் 6 நாளும் வேலை நாட்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என இருந்த பணி நாட்கள் 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×