என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு நீட்டிப்பால் கோவிலில் எளிமையாக நடந்த அரசு பெண் ஊழியர் திருமணம்
Byமாலை மலர்2 Jun 2020 3:05 PM GMT (Updated: 2 Jun 2020 3:05 PM GMT)
ஊரடங்கு நீட்டிப்பால் கோவிலில் வணிகவரித்துறை பெண் ஊழியர் ஒருவரின் திருமணம் எளிமையாக நடந்தது.
திருச்சி:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசு விதி முறைக ளின்படி சமூக இடை வெளியை பின்பற்றி எளிமையான முறை யில் திருமணங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, நேற்று வணிகவரித்துறை பெண் ஊழியர் ஒரு வரின் திருமணம் எளிமையாக நடந்தது.
திருச்சி விமான நிலையம் அம்பிகை நகர் பகுதியை சேர்ந்த லோகேந்திரனுக்கும், வணிக வரித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் மண்ணச்சநல்லூரை சேர்ந்த உஷாநந்தினிக்கும் திருமணம் வயலூர் முருகன் கோவிலிலும், திருமண வரவேற்பு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தடபுடலாக நடைபெறும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப் பட்டு இருந்தது.
ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிச்சயிக்கப்பட்ட தேதியான நேற்று அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, திருமணத்தை எளிமையாக நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் லோகேந் திரன்-உஷாநந்தினி திருமணமும், தொடர்ந்து பெண் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் எளிமையாக நேற்று நடைபெற்றது.
அப்போது, திருமணத்தில் பங்கேற்றோருக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது. அவர்கள், சமூக இடைவெளி விட்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதேபோல அப்பகுதியில் மட்டும் மேலும் 2 திருமணங்கள் நடை பெற்றன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசு விதி முறைக ளின்படி சமூக இடை வெளியை பின்பற்றி எளிமையான முறை யில் திருமணங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, நேற்று வணிகவரித்துறை பெண் ஊழியர் ஒரு வரின் திருமணம் எளிமையாக நடந்தது.
திருச்சி விமான நிலையம் அம்பிகை நகர் பகுதியை சேர்ந்த லோகேந்திரனுக்கும், வணிக வரித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் மண்ணச்சநல்லூரை சேர்ந்த உஷாநந்தினிக்கும் திருமணம் வயலூர் முருகன் கோவிலிலும், திருமண வரவேற்பு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தடபுடலாக நடைபெறும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப் பட்டு இருந்தது.
ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் நிச்சயிக்கப்பட்ட தேதியான நேற்று அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, திருமணத்தை எளிமையாக நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் லோகேந் திரன்-உஷாநந்தினி திருமணமும், தொடர்ந்து பெண் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் எளிமையாக நேற்று நடைபெற்றது.
அப்போது, திருமணத்தில் பங்கேற்றோருக்கு கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டது. அவர்கள், சமூக இடைவெளி விட்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதேபோல அப்பகுதியில் மட்டும் மேலும் 2 திருமணங்கள் நடை பெற்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X