search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    வத்தலக்குண்டுவில் மார்க்கெட் இயங்காததால் பொதுமக்கள் அவதி

    வத்தலக்குண்டுவில் மார்க்கெட் இயங்காததால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழை, தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகளை அனுப்பி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மார்க்கெட் தற்காலிகமாக மதுரை சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டது.

    தற்போது பள்ளி நிர்வாகம் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி அங்கு காய்கறி கடைகள் வேறு இடத்துக்கு மாற்ற கூறினர். இதனைத் தொடர்ந்து காளிம்மன் கோவில் அருகே வியாபாரிகள் மீண்டும் காய்கறிகடை அமைத்தனர்.

    ஆனால் போலீசார் இந்த பகுதியில் நெருக்கடி அதிகமாக உள்ளதால் காய்கறி மார்க்கெட் அமைத்தால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி பாலகுமார் தலைமையில் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காய்கறி வியாபாரிகள் பள்ளி வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக கடை அமைக்க வில்லை.

    இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் காளியம்மன் கோவில் அருகே மார்க்கெட் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிப்பதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி.யிடம் தெரிவித்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி. புதிதாக 2 இடங்கள் பார்த்துள்ளதாகவும், விரைவில் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததால் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    வத்தலக்குண்டுவில் மார்க்கெட் இயங்காததால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் சிறு காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×