என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானல் அம்மா உணவகத்துக்கு தேவையான காய்கறிகளுக்காக ஆழ்துளை கிணறு
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய நகர் பகுதிகளான அண்ணா நகர், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், செண்பகனூர், நாயுடுபுரம், தெரசா நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அப்போது இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலையில் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி சார்பில் வனத்துறை தங்கும் விடுதி எதிரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
இந்த பகுதியில் வனத்துறை, மாவட்ட கலெக்டர் தங்கும் அரசு விடுதிகள் கட்டிடம் உள்ளது. மேலும் செயல்படாத நகராட்சி கழிவறை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறு அமைக்காமல் அரசு கட்டிடங்களுக்கு அருகில் எதற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி குடிநீர் துறை அதிகாரியிடம் கேட்ட போது, அம்மா உணவகத்தில் வருங்காலத்திற்கு காய்கறிகள் தேவைக்கு விவசாயம் செய்ய இருப்பதாகவும், விவசாயத்திற்கான தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு நகராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்