search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்றும் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 666 பேருக்கு சளி மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 98 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×