search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே மெக்கானிக் கொலை வழக்கில் 3 பேர் கைது

    தஞ்சை அருகே மெக்கானிக் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 25). இவர் தனியார் லாரி செட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இரும்புக் கம்பியால் குணசீலனை தாக்கி கொலை செய்தனர்.

    இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குணசீலன் கொலை வழக்கில் அதை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30), கார்த்தி (23),அசோக் குமார் (33) ஆகிய 3 பேரைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×