என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2548 பேருக்கு பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வார்டில் 30-க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணியில் உள்ள ஒவ்வொரு குழுக்களும் 7 நாட்கள் பணி புரிந்த பிறகு 7 நாட்கள் தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப் படுகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்த பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் இதுவரை மொத்தம் 2548 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும், அவர்களில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று அறிகுறியோ, பாதிப்போ இல்லை எனவும், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்