என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் கணவரை மிரட்ட உடலில் தீ வைத்த பெண் பலி
Byமாலை மலர்2 Jun 2020 7:29 AM GMT (Updated: 2 Jun 2020 7:29 AM GMT)
சிவகாசியில் கணவரை மிரட்ட உடலில் தீ வைத்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
சிவகாசி மின்வாரிய காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ், பட்டாசு ஏஜெண்டு. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (வயது 39). இவர்களுக்கு 13 வயதில் மகன் உள்ளார்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கணவரை மிரட்டும் வகையில், ராஜராஜேஸ்வரி தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார். தீக்குச்சியை பொருத்திக் கொண்டு அவர், வாக்கு வாதம் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது.
கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீ காயத்துடன் ராஜராஜேஸ்வரியை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X