search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    தர்மபுரியில் முககவசம் அணியாமல் சாலையில் சென்ற 10 பேருக்கு அபராதம்

    தர்மபுரியில் முககவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

    தர்மபுரி:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், பொது இடங்களில் கூடும் பொதுமக்கள் சமூக இடை வெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தர்மபுரி உதவி கலெக்டர் தேன்மொழி மற்றும் நகராட்சி அதிகாரிகள் தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 4 ரோடு பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

    இதே போல் 4 ரோடு பகுதியில் உள்ள நகைக்கடையில் சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் நின்று கொண்டு இருந்த 2 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வின் போது முககவசம் வாங்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்று கூறிய 5 பேருக்கு உதவி கலெக்டர் முக கவசங்கள் வாங்கி கொடுத்தார்.

    இதே போன்று தர்மபுரி சின்னசாமிநாயுடு தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் முககவசம் அணியாமல் கடைக்குள் வாடிக்கையாளர்களை அனுமதித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×