என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சியில் பூ வியாபாரிகள் முற்றுகை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டது.
அருகில் உள்ள விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பூ வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை வியாபாரிகளுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
போக்குவரத்து அதிகாரிகள் சமரசம் செய்து வியாபாரிகளை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பூ வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிரந்தரமாக வியாபாரம் பாதிக்காத அளவில் பூ விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தங்கள் கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்