என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே தலைதுண்டித்து விவசாயி உள்பட 2 பேர் படுகொலை
Byமாலை மலர்1 Jun 2020 8:18 AM GMT (Updated: 1 Jun 2020 8:18 AM GMT)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி உள்பட 2 பேர் இன்று காலை கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி ஊராட்சிக்குட்டது அம்பலக்காரன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி.
இவர் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் வந்தார். அவர் முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அழகப்பன் (55) என்பவர் மோதலை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாத்துரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 பேரையும் வெட்டினார். இதில் முருகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
அழகப்பன் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தலை துண்டாகி பிணமாக கிடந்த முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் முன் விரோதமா? அல்லது நில பிரச்சனையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் மற்றும் அண்ணாத்துரை இடையே ஏற்கனவே மேலூர் காவல் நிலையத்தில் முன் விரோத வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அழகப்பன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஆவார்.
மேலூர் அருகே இன்று நடந்த இரட்டை கொலை சம்பம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி ஊராட்சிக்குட்டது அம்பலக்காரன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி.
இவர் இன்று காலை 9 மணியளவில் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் வந்தார். அவர் முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அழகப்பன் (55) என்பவர் மோதலை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாத்துரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 பேரையும் வெட்டினார். இதில் முருகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
அழகப்பன் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தலை துண்டாகி பிணமாக கிடந்த முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் முன் விரோதமா? அல்லது நில பிரச்சனையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் மற்றும் அண்ணாத்துரை இடையே ஏற்கனவே மேலூர் காவல் நிலையத்தில் முன் விரோத வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அழகப்பன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஆவார்.
மேலூர் அருகே இன்று நடந்த இரட்டை கொலை சம்பம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X