என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 துணை மின் நிலையங்கள்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Byமாலை மலர்1 Jun 2020 7:24 AM GMT (Updated: 1 Jun 2020 7:24 AM GMT)
திருப்பூர், காஞ்சிபுரம், சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.235 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
அவர் மேலும் திறந்து வைத்த மின் நிலையங்கள் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; விழுப்புரம் மாவட்டம் சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்)
சேலம் மாவட்டம் பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
அவர் மேலும் திறந்து வைத்த மின் நிலையங்கள் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் 75 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரத்தில், 10 கோடியே 39 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; விழுப்புரம் மாவட்டம் சிட்டம்பூண்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 24 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு தரம் உயர்த்தப்பட்ட 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 7 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாச்சார அறிமுகம்)
சேலம் மாவட்டம் பேளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அரசடி ஆகிய இடங்களில் 19 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் இந்தளூர், கோயம்புத்தூர் மாவட்டம் பந்தய சாலை மற்றும் பட்டணம் ஆகிய இடங்களில் 72 கோடியே 36 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டானில் 4 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு தரம் உயர்த்தப்பட்ட 110/11 கி.வோ. துணை மின் நிலையம்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கேப் ஆகிய இடங்களில் 9 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு உள்ளக 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் என மொத்தம் 235 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X