என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ரூ.13 லட்சம் கொள்ளை- மதுரவாயலில் துணிகரம்
Byமாலை மலர்1 Jun 2020 4:04 AM GMT (Updated: 1 Jun 2020 4:04 AM GMT)
மதுரவாயலில் கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரவாயல்:
மதுரவாயல் எம்எம்டிஏ காலணி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்மநபர் காவலாளியிடம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய காவலாளியும் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை ஏடிஎம் மையத்திற்குள் அனுமதித்து உள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற அந்த மர்மநபர் சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்து உள்ளார்.
இதைகண்ட அங்கிருந்த பணம் எடுக்க வந்த நபரும் வங்கி ஊழியர் என நினைத்துள்ளார். பணம் முழுவதையும் எடுத்துக்கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வெளியே கிளம்பி விடவே சந்தேகமடைந்த பணம் எடுக்க வந்த நபர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பணம் திருடு போனதை தெரிந்து கொண்ட காவலாளி உடனடியாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் எம்எம்டிஏ காலணி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்மநபர் காவலாளியிடம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய காவலாளியும் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை ஏடிஎம் மையத்திற்குள் அனுமதித்து உள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற அந்த மர்மநபர் சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்து உள்ளார்.
இதைகண்ட அங்கிருந்த பணம் எடுக்க வந்த நபரும் வங்கி ஊழியர் என நினைத்துள்ளார். பணம் முழுவதையும் எடுத்துக்கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வெளியே கிளம்பி விடவே சந்தேகமடைந்த பணம் எடுக்க வந்த நபர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பணம் திருடு போனதை தெரிந்து கொண்ட காவலாளி உடனடியாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X