search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உத்தமபாளையம் அருகே கோஷ்டி மோதலில் ராணுவ வீரர் உள்பட 13 பேர் கைது

    உத்தமபாளையம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராணுவ வீரர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தம்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி பகுதிகளை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது கடந்த வாரம் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலாக மாறியது. போலீசார் இரு தரப்பை சேர்ந்த பெரியவர்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.

    ஆனால் மீண்டும் இரு கிராமத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதுடன் வீடுகள் மீதும் கல் வீசி சேதப்படுத்தினர்.

    இது குறித்து அனுமந்தன்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் ரகு (30), செந்தில்பாபு, கோபிநாத், தங்கராஜ், முத்துமணி, பாலமுருகன், கோவிந்தம்பட்டியை சேர்ந்த முத்து (44), மணி, பிரபாகரன், சின்னப்பர், சந்திரன், சதீஷ், அருண் ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

    இதில் 12 பேர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ரகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அனுமந்தன்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி பகுதியில் உத்தமபாளையம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×