என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உத்தமபாளையம் அருகே கோஷ்டி மோதலில் ராணுவ வீரர் உள்பட 13 பேர் கைது
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தம்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி பகுதிகளை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது கடந்த வாரம் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலாக மாறியது. போலீசார் இரு தரப்பை சேர்ந்த பெரியவர்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.
ஆனால் மீண்டும் இரு கிராமத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதுடன் வீடுகள் மீதும் கல் வீசி சேதப்படுத்தினர்.
இது குறித்து அனுமந்தன்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் ரகு (30), செந்தில்பாபு, கோபிநாத், தங்கராஜ், முத்துமணி, பாலமுருகன், கோவிந்தம்பட்டியை சேர்ந்த முத்து (44), மணி, பிரபாகரன், சின்னப்பர், சந்திரன், சதீஷ், அருண் ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இதில் 12 பேர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ரகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அனுமந்தன்பட்டி மற்றும் கோவிந்தன்பட்டி பகுதியில் உத்தமபாளையம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்