search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது

    திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது53), பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் குருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×