search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    வைகை அணையில் இருந்து 3 நாட்களில் மொத்தம் 216 மி.கன அடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையுடன் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக கடந்த 25-ந் தேதி மாலை 6 மணி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் வரையில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    வைகை அணையில் இருந்து 3 நாட்களில் மொத்தம் 216 மி. கன அடி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியோடு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

    வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 3 அடி குறைந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது 41.80 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 38.91 அடியாக உள்ளது. தற்போது வைகை அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும், சேடப்பட்டி, தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 72 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 862 மி. கன அடியாக இருந்தது.
    Next Story
    ×