search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி போலீசார் ராமாபுரம் மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகிரி தம்மணப்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 20), சூளகுண்டா முனிராஜ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.

    கல்லாவி போலீசார் ஆனந்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஆனந்தூரைச் சேர்ந்த மாது (48), தண்டபாணி (40), அண்ணாமலை (49), சங்கர் (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×