search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    பெரும்பாறை அருகே காட்டு யானைகளை புகை போட்டு விரட்டும் பணி தீவிரம்

    பெரும்பாறை அருகே வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் புகை போட்டு காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை அருகே கே.சி.பட்டி, ஆடலூர், பெரியூர், பள்ளத்துகால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இந்தநிலையில் சமீபகாலமாக புல்லாவெளி, நேர்மலை, புலையன் வளவு, கூட்டுக்காடு, ஆத்துக்காடு, 8 வீடு, தடியன்குடிசை பகுதியில் காட்டுயானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, அவரை, சவ்சவ், பீன்ஸ், உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன.

    மேலும் தோட்டங்களில் உள்ள வீடுகளையும் சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வித்யா உத்தரவின்பேரில் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் செம்பட்டி பிரிவு வனவர் அப்துல் ரகுமான் வனக் காப்பாளர் சங்கர், ரமேஷ் மற்றும் வனகாவலர்கள் புகைபோட்டும், பட்டாசு வெடித்தும் காட்டுயானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×