search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

    ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு பாலாற்று பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆற்காட்டை அடுத்த பெருங்கால்மேடு பாலாற்று பகுதியில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த புதுப்பாடி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சிவகாந்தன் (வயது 43), எசையனூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (24), தினகரன் (41) ஆகிய 3 பேரை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×