search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புளியங்குடியில் இளம்பெண் தற்கொலை

    புளியங்குடியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி:

    புளியங்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் மகள் நந்தினி (வயது 25). பி.இ. பட்டதாரியான இவர் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டு அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக நந்தினி சொந்த ஊரில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×