என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Byமாலை மலர்28 May 2020 3:31 PM GMT (Updated: 28 May 2020 3:31 PM GMT)
கடையத்தில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்ததாக சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடையம்:
கீழக்கடையம் பஞ்சாயத்து கல்யாணிபுரத்தில் ஆதி திராவிட நலத்துறை மூலம் நலிந்தவர்களுக்கு இலவச பட்டா வீட்டுமனை பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு பல வீடுகளை அரசே கட்டி கொடுத்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீடு சம்பந்தமாக பத்திர அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்றபோது, தனது பெயரில் உள்ள சொத்து மற்றொரு பெயரில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பெண் தன்னுடன் வீட்டுமனை பெற்றவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு விசாரணை செய்ததில் பலரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தங்களது நிலங்களை போலி சான்றிதழ்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கடையம் போலீசில் புகார் செய்தனர். மேலும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு முறையிட்டனர்.
தெற்கு கடையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அனுமதி இல்லாமல் ஊரடங்கு நேரத்தில் திரண்டதாக 11 பெண்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கீழக்கடையம் பஞ்சாயத்து கல்யாணிபுரத்தில் ஆதி திராவிட நலத்துறை மூலம் நலிந்தவர்களுக்கு இலவச பட்டா வீட்டுமனை பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு பல வீடுகளை அரசே கட்டி கொடுத்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீடு சம்பந்தமாக பத்திர அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்றபோது, தனது பெயரில் உள்ள சொத்து மற்றொரு பெயரில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பெண் தன்னுடன் வீட்டுமனை பெற்றவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு விசாரணை செய்ததில் பலரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தங்களது நிலங்களை போலி சான்றிதழ்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கடையம் போலீசில் புகார் செய்தனர். மேலும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு முறையிட்டனர்.
தெற்கு கடையம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அனுமதி இல்லாமல் ஊரடங்கு நேரத்தில் திரண்டதாக 11 பெண்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X