என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது
Byமாலை மலர்28 May 2020 6:38 AM GMT (Updated: 28 May 2020 6:38 AM GMT)
பொது மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், ஜூன் 2-வது வாரம் வரை வெப்பநிலை அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் ஆண்டுதோறும் மே 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நீடிக்கும். இந்த 25 நாட்களும் அக்னி வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும்.
இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.
கடந்த 22-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அன்றைய தினம் திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
அதன்பிறகு அடுத்தடுத்து வந்த நாட்களில் சென்னை மீனம்பாக்கம், கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவதாகி வருகிறது.
இந்த நிலையில் பொது மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், ஜூன் 2-வது வாரம் வரை வெப்பநிலை அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் ஆண்டுதோறும் மே 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நீடிக்கும். இந்த 25 நாட்களும் அக்னி வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும்.
இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.
கடந்த 22-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அன்றைய தினம் திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
அதன்பிறகு அடுத்தடுத்து வந்த நாட்களில் சென்னை மீனம்பாக்கம், கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவதாகி வருகிறது.
இந்த நிலையில் பொது மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், ஜூன் 2-வது வாரம் வரை வெப்பநிலை அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X