என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
Byமாலை மலர்27 May 2020 3:41 PM GMT (Updated: 27 May 2020 3:41 PM GMT)
கூடங்குளம் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போது 210 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 21-ந் தேதி 2-வது அணுஉலை ஜெனரேட்டரில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வந்த 7 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஜெனரேட்டரில் ஏற்பட்ட அதிர்வு குறித்து ஆய்வு செய்து அந்த பழுதினை சரி செய்தனர். இதையடுத்து நேற்று காலை 9.50 மணிக்கு 2-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போது 260 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
படிப்படியாக மின்உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை அடையும் என அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முதலாவது அணு உலையில் தற்போது 480 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 21-ந் தேதி 2-வது அணுஉலை ஜெனரேட்டரில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வந்த 7 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவினர் ஜெனரேட்டரில் ஏற்பட்ட அதிர்வு குறித்து ஆய்வு செய்து அந்த பழுதினை சரி செய்தனர். இதையடுத்து நேற்று காலை 9.50 மணிக்கு 2-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போது 260 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
படிப்படியாக மின்உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை அடையும் என அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முதலாவது அணு உலையில் தற்போது 480 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X