என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொந்த ஊருக்கு செல்ல முடியாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்27 May 2020 2:34 PM GMT (Updated: 27 May 2020 2:34 PM GMT)
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத ஏக்கத்தில் வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
மேற்கு வங்காளம் முர்சி தாபாத் மாவட்டம் ஹரிபான்கா பகுதியை சேர்ந்தவர் போல்ட்டு பகாரியா (வயது 20), தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரி பகாரியா.
போல்ட்டு பகாரியா தனது தந்தையுடன் ஆரல்வாய்மொழி அருகே அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். மனைவி சங்கரி பகாரியா மேற்கு வங்காளத்தில் உள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் போல்ட்டு சகாரியா ஊருக்கு செல்ல முடியாத ஏக்கத்தில் இருந்தார்.
இந்தநிலையில் ஊரில் உள்ள மனைவி, போல்ட்டு பகாரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த போல்ட்டு பகாரியா நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது தந்தை காளியா பகாரியா மற்றும் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போல்ட்டு பகாரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்காளம் முர்சி தாபாத் மாவட்டம் ஹரிபான்கா பகுதியை சேர்ந்தவர் போல்ட்டு பகாரியா (வயது 20), தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரி பகாரியா.
போல்ட்டு பகாரியா தனது தந்தையுடன் ஆரல்வாய்மொழி அருகே அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். மனைவி சங்கரி பகாரியா மேற்கு வங்காளத்தில் உள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் போல்ட்டு சகாரியா ஊருக்கு செல்ல முடியாத ஏக்கத்தில் இருந்தார்.
இந்தநிலையில் ஊரில் உள்ள மனைவி, போல்ட்டு பகாரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த போல்ட்டு பகாரியா நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது தந்தை காளியா பகாரியா மற்றும் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போல்ட்டு பகாரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X