என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்27 May 2020 12:59 PM GMT (Updated: 27 May 2020 12:59 PM GMT)
உளுந்தூர்பேட்டை அருகே தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவருடைய மனைவி ராஜலட்சுமி. ராமசாமி துலக்கம்பட்டு கிராம எல்லையில் உள்ள ஏரிக்கரை அருகே அமைந்துள்ள தனது விளை நிலத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்த ராமசாமி, ராஜலட்சுமி ஆகியோர் கூச்சலிட முயன்றனர். அதற்குள் மர்மநபர்கள், அவர்கள் 2 பேரையும் தாக்கி, வீட்டில் கட்டிப்போட்டனர்.
பின்னர் அவர்கள் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவர்களது வாயில் துணியை திணித்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 16 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே நேற்று காலை ராமசாமியின் உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு ராமசாமியும், ராஜலட்சுமியும் கட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர் 2 பேரையும் மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மர்மநபர்களை பிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தம்பதியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X