search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களின் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போய் கொண்டிருந்தது.இதனைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் வாலிபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்தபோது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (29), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த பாரதிராஜா (27), என்பது தெரியவந்தது.

    மேலும் 2 பேரும் சேர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×