search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவர்கள்
    X
    மருத்துவர்கள்

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக மேலும் 675 மருத்துவர்கள் நியமனம்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகத்தில் மேலும் 675 மருத்துவர்களை நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் தேவைகருதி பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×