என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இருந்து வந்த டீக்கடை ஊழியருக்கு கொரோனா
Byமாலை மலர்26 May 2020 4:30 PM GMT (Updated: 26 May 2020 4:30 PM GMT)
குழித்துறை அருகே கேரளாவில் இருந்து வந்த டீக்கடை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எல்லையில் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
களியக்காவிளை:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 65 வயது முதியவர் அங்குள்ள டீக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குழித்துறை அருகே எருத்தாவூரில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் கேரள மாநிலத்துக்கு புறப்பட்ட போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டீக்கடை ஊழியரின் சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி, மகனுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் மற்றும் களியக்காவிளை செயல் அலுவலர் ஏசுபாலன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை அடைத்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 65 வயது முதியவர் அங்குள்ள டீக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குழித்துறை அருகே எருத்தாவூரில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மீண்டும் கேரள மாநிலத்துக்கு புறப்பட்ட போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டீக்கடை ஊழியரின் சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி, மகனுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் மற்றும் களியக்காவிளை செயல் அலுவலர் ஏசுபாலன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை அடைத்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X