search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    பெரம்பலூர்-அரியலூரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 139 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 135 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 356 பேரில், 350 பேரும் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 4 பேரில், 2 பிரசவித்த தாய்மார்கள் உள்பட 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 6 பேரில், 5 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை முகப்பேர் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர், அரியலூர் மாவட்டத்தில் 48 பேர் என 51 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×