என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி கைது
Byமாலை மலர்26 May 2020 12:01 PM GMT (Updated: 26 May 2020 12:01 PM GMT)
மதுரை அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஜோதிகா (வயது 27).
ஜோதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய ராமன் (24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் கருப்பையா தனது மனைவி ஜோதிகாவை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கருப்பையா தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது ஜோதிகா மற்றும் விஜயராமன் உள்ளிட்ட 4 பேர் கருப்பையாவையும், அவரது சகோதரர் மீனாட்சி சுந்தரத்தையும் உருட்டுக் கட்டை, கம்பி ஆகியவற்றால் தாக்கினர்.
இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கருப்பையாவின் தம்பி குமார் விக்கிரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கருப்பையாவின் மனைவி ஜோதிகா, கள்ளக்காதலன் விஜயராமன் மற்றும் சின்னசாமி (45), ஆதம்மாள் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஜோதிகா (வயது 27).
ஜோதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய ராமன் (24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் கருப்பையா தனது மனைவி ஜோதிகாவை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கருப்பையா தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது ஜோதிகா மற்றும் விஜயராமன் உள்ளிட்ட 4 பேர் கருப்பையாவையும், அவரது சகோதரர் மீனாட்சி சுந்தரத்தையும் உருட்டுக் கட்டை, கம்பி ஆகியவற்றால் தாக்கினர்.
இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கருப்பையாவின் தம்பி குமார் விக்கிரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கருப்பையாவின் மனைவி ஜோதிகா, கள்ளக்காதலன் விஜயராமன் மற்றும் சின்னசாமி (45), ஆதம்மாள் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X