என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊரடங்கு தளர்த்தப்படுமா?- மெட்ரோ ரெயிலை ஜூன் 1-ந் தேதி முதல் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
கொரோனா ஊரடங்கால் மார்ச் 21-ல் இருந்து சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க நிர்வாகம் தயாராக உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகள் சமூச இடைவெளி பின்பற்ற குறியீடு செய்யப்பட்டுள்ளது.
நிலையத்திலுள்ள 4 நுழைவு வாயிலில் ஒரு நுழைவு வாயில் மட்டும் பயன்படுத்தவும், தெர்மல் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு பயணிகளை ரெயிலில் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன் 1-ந் தேதி முதல் ரெயிலை இயக்க நிர்வாகம் தயாராக உள்ளது. இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா அதிகரித்தாலும் ஜூன் 1-ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படவோ, தளர்த்தப்படவோ வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பிற மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி ரெயில்கள், விமானங்கள் இயக்க அரசு அனுமதித்து உள்ளதால், ஏ.சி. பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்கள் சேவை தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அனுமதி கிடைத்தால் ஜூன் மாதத்தில் இருந்து போதிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் ரெயில்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்