search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவின் பால் - பொருள்
    X
    ஆவின் பால் - பொருள்

    கோவை மாவட்டத்தில் ஆவின் நெய், பால்கோவா ஆன்லைன் மூலம் விற்பனை

    கோவை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் தரமான பால் உபபொருட்களான நெய், பால்கோவா உள்ளிட்டவைகளை இணைய தளம் மூலமாக விற்பனை செய்ய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின்) நிறுவனமானது கோவை மாவட்டத்தில் கோவிட்-19 காரணமாக 144 தடை உத்தரவு காலத்திலும் பொதுமக்களுக்கு எந்தவித சிரமும் இன்றி நாளொன்றுக்கு சுமார் 1.70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதுடன் சுமார் 1.60 லட்சம் லிட்டர் பால் விற்பனையை மேற்கொண்டு வருகிறது.

    தற்சமயம் கோவிட்-19 பாதிப்பினை குறைக்கும் வகையிலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் வகையிலும், பொதுமக்களின் இல்லங்களிலேயே ஆவின்பால் உப பொருட்கள் கிடைக்கும் வகையிலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படியும் ஆவின் நிறுவனத்தின் தரமான பால் உபபொருட்களான நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணெய், சாக்லெட் மற்றும் பிற உபபொருட்களை பொதுமக்கள் சுகி நிறுவனத்தின் இணைய தளம் மூலமாக ஆர்டர் செய்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் விலைக்கே அவர்களின் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் வகையில் சுகி என்ற டெலிவரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 24-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களை தங்கள் இல்லங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவை ஆவின் தலைவர் கே.பி.ராஜு தெரிவித்துள்ளார்.

    அப்போது பொது மேலாளர் ரவிகுமார் உடனிருந்தார். நுகர்வோர்கள் தங்கள் இது குறித்தான சந்தேகங்களை விற்பனை மேலாளர் சங்கீதாவை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×