search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறிய 11,668 பேர் கைது

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 11,668 பேர் கைதாகி உள்ளனர்.
    விழுப்புரம்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் 81 பேர் மீது வழக்குபதிவு செய்து 190 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மாவட்டத்தில் 11,268 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. 11,668 பேர் கைதாகி உள்ளனர்.

    இதையடுத்து ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 785 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 221 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×