என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோடு ஆட்டோவில் கடத்த முயன்ற 4 கடல் ஆமைகள் மீட்பு- டிரைவர் கைது
Byமாலை மலர்26 May 2020 7:04 AM GMT (Updated: 26 May 2020 7:04 AM GMT)
தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோவில் கடத்த முயன்ற 4 கடல் ஆமைகளை மீட்ட போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர்கள் கடற்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தருவைக்குளத்துக்கும், வெள்ளப்பட்டிக்கும் இடையே ஓடை நீர், கடலில் சேரும் இடத்துக்கு அருகே உள்ள தாம்போதி பாலம் அருகே ஒரு படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த படகில் இருந்து 4 கடல் ஆமைகளை லோடு ஆட்டோவில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அந்த லோடு ஆட்டோவில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, 4 கடல் ஆமைகள் உயிரோடு இருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அந்த கடல் ஆமைகளை மீட்டு, தருவைக்குளம் கடலில் விட்டனர்.
தொடர்ந்து, தடை செய்யப்பட்ட உயிரினத்தை கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவர் குமாரை (வயது 45) கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனச்சரக அலுவலர்கள் கடற்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி தருவைக்குளத்துக்கும், வெள்ளப்பட்டிக்கும் இடையே ஓடை நீர், கடலில் சேரும் இடத்துக்கு அருகே உள்ள தாம்போதி பாலம் அருகே ஒரு படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த படகில் இருந்து 4 கடல் ஆமைகளை லோடு ஆட்டோவில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அந்த லோடு ஆட்டோவில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, 4 கடல் ஆமைகள் உயிரோடு இருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அந்த கடல் ஆமைகளை மீட்டு, தருவைக்குளம் கடலில் விட்டனர்.
தொடர்ந்து, தடை செய்யப்பட்ட உயிரினத்தை கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவர் குமாரை (வயது 45) கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X