என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த பெண்
Byமாலை மலர்25 May 2020 12:16 PM GMT (Updated: 25 May 2020 12:16 PM GMT)
கொடைக்கானலில் வீட்டில் உடல் கருகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரீனா பேகம் (வயது 40). இவர் தனது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்து தீப்பிடித்து புகை வந்தது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஜெரீனா பேகம் உடல் முழுவதும் தீப்பிடித்து கருகிய நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X