search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதிய தம்பதி உடல் மீட்பு
    X
    முதிய தம்பதி உடல் மீட்பு

    பூட்டிய வீட்டிற்குள் முதிய தம்பதி உடல் மீட்பு- கொரோனாவால் உயிரிழப்பா?

    சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

    கடந்த வாரம் கொரோனா சோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோது இருவரும் ஒத்துழைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதி ஜீவன்-தீபாவின் உடல்களை மீட்ட போலீசார், கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×