என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு மிரட்டல்- 4 பேர் கைது
Byமாலை மலர்25 May 2020 11:55 AM GMT (Updated: 25 May 2020 11:55 AM GMT)
பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி மனைவி பாக்கியம் (வயது 41). இவர் பொது வழிப்பாதையை ஜல்லிக்கற்களை போட்டு மறித்து யாரும் செல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த யோசேப்பு என்பவரை தனது உறவினர்களுடன் சேர்ந்து பாக்கியம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யோசேப்பு ஆலங்குளம் பேருராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு சென்ற செயல் அலுவலர் கணேசனை, பாக்கியம் மற்றும் அவரது உறவினர்கள் ரவி (43), பாப்புத்துரை மனைவி தனலட்சுமி, ஜெயராஜ் (41) ஆகியோர் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாக்கியம் உள்ளிட்ட 4 பேரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X