என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துறையூரில் வெயில் கொடுமையால் மூதாட்டி பலி
துறையூர்:
தமிழகம் முழுவதும்கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் பொது மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 60). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி, துறையூர் அரசு மருத்துவமனைபகுதியில் தங்கியிருந்து, தன்னார்வலர்கள் தரும் உணவைஉண்டு ரோட்டோரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒருவீட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்து விட்டு, நடந்து சென்ற போது ,வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும்துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாப்பம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெயில்கொடுமையால் மூதாட்டி பலியானது துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்