என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடத்தூர் அருகே தீயில் கருகிய தொழிலாளி பலி
Byமாலை மலர்25 May 2020 9:56 AM GMT (Updated: 25 May 2020 9:56 AM GMT)
கடத்தூர் அருகே தீயில் கருகிய தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் தேவேந்திரன் (வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி ருக்குமணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் தேவேந்திரன் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் தேவேந்திரன் மதுகுடிக்க பெற்றோர் மற்றும் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் தேவேந்திரன் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
பின்னர் அவர் அருகே உள்ள கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கை கையில் எடுத்தபோது திடீரென உடலில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவேந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X