search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    மானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்து - சிறுவன் பலி

    மானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
    நெல்லை:

    மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் அபிலாஷ் (வயது 10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். பிச்சைமுத்து சம்பவத்தன்று தனது மகனுடன் மொபட்டில் நெல்லையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். வடக்கு புறவழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது.

    இதில் சிறுவன் அபிலாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். பிச்சைமுத்து லேசான காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிலாஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×